Skip to main content

பயத்தில் சாப்பிட முடியவில்லை..கதறி அழவேண்டும் போலிருக்கிறது – நடிகை கண்ணீர்

Aug 18, 2021 106 views Posted By : YarlSri TV
Image

பயத்தில் சாப்பிட முடியவில்லை..கதறி அழவேண்டும் போலிருக்கிறது – நடிகை கண்ணீர் 

அதை நினைத்துப் பார்த்தாலே பயத்தில் சாப்பிட முடியவில்லை. கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது என்று கண்ணீர் வடிக்கிறார் நடிகை அர்ஷி கான். பிரபல மாடல் அழகி அர்ஷிகான் இந்தி பிக்பாஸில் பங்கேற்று பிரபலமானவர். இவர் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். இவரின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு வந்துவிட்டனர். ஆனால், இவரின் குடும்பம் உறவினர்கள் பலரும் இன்னமும் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கின்றனர்.



இந்நிலையில் தானும் ஆப்கானிஸ்தானில் பிறந்தவள் என்பதை நினைக்கும் போது அங்கு தற்போது நடக்கும் சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது தனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்றும், கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது என்றும் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் அர்ஷிதா கான்.



ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டததால், காபூல் விமான நிலையத்தில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன என்று தெரிவித்துள்ள அர்ஷிதா கான், தாலிபான்களின் பிடியில் குழந்தைகள், பெண்கள் பெண்களின் நிலைமை என்னவாகும் என்று உலகமெங்கிலும் உள்ள மக்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை இணைத்துப் பார்த்தால் தனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்கிறார்.



ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்யுமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று சொல்லும் அர்ஷிகான், தனது உறவினர்களும் நண்பர்களும் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால் மட்டுமே அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் கவலை தெரிவித்திருக்கிறார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை