Skip to main content

ஆப்கன் விவகாரம் குறித்து 24ம் தேதி சிறப்பு கூட்டம் - ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு!

Aug 18, 2021 142 views Posted By : YarlSri TV
Image

ஆப்கன் விவகாரம் குறித்து 24ம் தேதி சிறப்பு கூட்டம் - ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு! 

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர்.



ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.



தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி உள்ளதால் அந்நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் பல்வேறு மனித உரிமை மீறல்களும் தலிபான் பயங்கரவாதிகளால் அரங்கேறி வருகிறது.



இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆப்கனில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை