Skip to main content

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள பயணத்தடை!

Aug 14, 2021 116 views Posted By : YarlSri TV
Image

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள பயணத்தடை! 

மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்க முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.



மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போர் குறித்து ஆராய்வதற்கான இன்று  முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மீறி, மாகாண எல்லைகளை கடக்க முயற்சிப்போரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நேற்றிரவு முதல் கடுமையாக்கப்பட்டது.



எவ்வாறாயினும், மாகாண எல்லையை கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை பரிசோதனைக்கு உட்படுத்த விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை