Skip to main content

கொச்சி கடற்படை தளத்தில் டிரோன் பறந்ததால் பரபரப்பு!

Jul 31, 2021 154 views Posted By : YarlSri TV
Image

கொச்சி கடற்படை தளத்தில் டிரோன் பறந்ததால் பரபரப்பு! 

கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை மையம் அமைந்துள்ளது. அதே பகுதியில் பழைய தொப்பம்பாடி பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு மேலே கடந்த 26-ம் தேதி ஒரு டிரோன் பறந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்படி சிவில், தனியார், ராணுவ விமான நிலையங்களின் 3 கி.மீ. சுற்றளவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராணுவ அமைப்புகள், தளங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் முன் அனுமதியின்றி 3 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன்கள் பறக்க தடை உள்ளது.



எனவே கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை மையம் அமைந்துள்ளதால், அங்கு எந்த வித அனுமதியும் இன்றி இந்த டிரோனை பறக்க விட்டது குற்றமாகும்.



இந்த டிரோனை கடற்படையினர் கைப்பற்றி போலீசிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இந்த டிரோனை பறக்க விட்டவர் கொச்சியின் வடுதலா பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர் என தெரிய வந்தது. அவர் சுற்றுலா தொடர்பான தனது வலைத்தளத்தில் பதிவிடவும், யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யவும்தான் இந்த டிரோனை பறக்க விட்டதாக தெரிவித்துள்ளார்.



ஆனால் அவர் கடற்படை கட்டளை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோனை பறக்க விட எந்தவித முன்அனுமதியும் பெறவில்லை.



இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்த டிரோனை பறக்க விட்ட நபர் அதை மற்றொரு நபரிடம் இருந்து ஓ.எல்.எக்ஸ். தளம் வழியாக ரூ.1 லட்சத்துக்கு பெற்றதாக கூறினார். எனவே இதற்காக அவரால் எந்தவொரு பில்லையும் தர முடியவில்லை” என தெரிவித்தார்.



இந்த சம்பவம் தொடர்பாக டிரோனை பறக்க விட்ட நபர் மீது போலீசார் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவுகள் 151 மற்றும் 102-ன்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை