தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அதிமுக போராட்டத்தின் நோக்கம் - அண்ணாமலை
Jul 29, 2021 101 views Posted By : YarlSri TV
தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அதிமுக போராட்டத்தின் நோக்கம் - அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொய்யான வாக்குறுதியை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து உள்ளது. தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பா.ஜ.க. மக்களுடன் நிற்கும். தி.மு.க. மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். இந்த விலை உயர்வை பா.ஜ.க.வும் ஏற்றுக்கொள்ளவில்லை. நிச்சயமாக பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை காணப்படும்.
பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு தயார். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மாநில நிதியமைச்சர் பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரலாம் என்று சொல்லட்டும். அப்புறம் பார்க்கலாம். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசிய விஷயங்களை இப்போது பேச வேண்டியது தானே. பெட்ரோல் விலையை குறைக்க முயற்சி எடுக்கப்படும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago