விரைவில் உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ் -ஈபிஎஸ் இன்று ஆலோசனை!
Jul 22, 2021 158 views Posted By : YarlSri TV
விரைவில் உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ் -ஈபிஎஸ் இன்று ஆலோசனை!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வந்தன. பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டு பிறகு அவரை கட்சியிலிருந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் நீக்கினர். தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் அதிமுக உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் .ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படாமல் சர்வாதிகார போக்கு நடைபெற்று வருவதாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி மகாதேவன் விசாரித்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் அதிமுகவின் தேர்தல் டிசம்பருக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அக்கட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ஜொ்மனியில் கரோனா நோய்த்தடுப்புக் கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தடையை மீறி சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது!
-
அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்.. ஒரு பேருந்தில் எவ்வளவு பயணிகள் அனுமதி தெரியுமா ?
-
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago