யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இராணுவத்தால் கட்டப்பட்ட புதிய வீடு!
Jul 25, 2021 154 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இராணுவத்தால் கட்டப்பட்ட புதிய வீடு!
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - யாழ்ப்பாணம் சுழிபுரத்தின் வறிய குடும்பத்திற்காக மேலும் ஒரு புதிய வீடு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த வீட்டின் சாவியை பயனாளியான கதிரன் கோவிந்தசாமியிடம் அண்மையில் இந்து மத சடங்குகளுக்கு மத்தியில் ஒப்படைக்கப்பட்டது.
513 வது பிரிகேட்டின் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் 16 வது கெமுனு ஹேவா படையினரால் இந்த கட்டுமானத்திற்கான தங்களது திறமையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் உழைப்பையும் வழங்கினர்.
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பயனாளியிடம் வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அவ்வீட்டின் திறப்பு விழாவின் போது வீட்டிற்குத் தேவையான உலர் உணவு பொதிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் வீட்டின் உரிமையாளருக்கு பிரதம விருந்தினர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாவட்ட செயலக அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகள், 51 வது படைப்பிரிவு தளபதி, 511, 512, 513 மற்றும் 515 பிரிகேட்களின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை தலைமையக சிப்பாய்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago