Skip to main content

பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைக்க வேண்டும் – நிதியமைச்சர்

Jul 17, 2021 185 views Posted By : YarlSri TV
Image

பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைக்க வேண்டும் – நிதியமைச்சர் 

நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது கருத்து வெளியிட்ட நிதியமைச்சர், நாட்டை திறக்க அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



உரிய முகாமைத்துவத்துடன் பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொவிட்-19 பரவல் காரணமாக நாட்டை பல தடவைகள் முடக்க நேரிட்டது.



இதன்காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு கிடைக்காது போனது. அந்த செயற்பாடுகளை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.



யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது தற்போது பொருளாதார வளர்ச்சியானது சிறந்து காணப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை