அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார் - வாடிகன் தகவல்
Jul 08, 2021 172 views Posted By : YarlSri TV
அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார் - வாடிகன் தகவல்
போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இத்தாலியின் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந்தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது. 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், அவரது பெருங்குடலின் இடதுபாகம் அகற்றப்பட்டது. இந்த ஆபரேஷனுக்குப்பின் அவர் உடல் நலம் தேறி வருவதாக வாடிகன் அறிவித்து உள்ளது.
இது குறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் மாத்தியோ புரூனி நேற்று கூறுகையில், ‘குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார். அவரது உடல் நலம் வழக்கமான முறையிலும் மற்றும் திருப்திகரமாகவும் உள்ளது. அவர் உணவு எடுத்துக்கொள்கிறார்’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் வாழ்த்து கூறியிருப்பதாக வெள்ளை மாளிகை நேற்று கூறியிருந்தது.
ஏராளமானோர் தனக்காக பிரார்த்தனை செய்வதுடன், வாழ்த்தும் தெரிவித்து வருவது கண்டு போப் ஆண்டவர் நெகிழ்ந்து போயிருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago