20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார்!
Jul 08, 2021 153 views Posted By : YarlSri TV
20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார்!
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
20 ஐ ஆதரித்திருந்தாலும் ஆளுங்கட்சியில் இணைவது தொடர்பான அறிவிப்பை அரவிந்குமார் இன்னும் வெளியிடவில்லை. ஆளுந்தரப்பில் இருந்து அவருக்குப் பதவிகள் எதுவும் வழங்கப்படவும் இல்லை. எதிர்காலத்தில் வழங்கப்படுமா என்பது பற்றியும் எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை.
எனவே, எதிரணியில் இருந்து 20 இற்காக அரசுக்கு ஆதரவு வழங்கியதுபோல், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போதும் அரவிந்குமார் . உதய கம்மன்பிலவை ஆதரித்து பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறிப்பாக வாக்கெடுப்பில் அவர் பங்கேற்காமல் இருந்தால்கூட, பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவேமாட்டார் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படாததாலும், மக்களின் பக்கம் நின்றும் பிரேரணைக்கு அரவிந்குமார் ஆதரவு வழங்கக்கூடும் எனவும் அவருக்கு நெருக்கமான சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago