தோப்பு வெங்கடாசலம் வாகனத்தில் ஸ்டாலின் – உதயநிதி
Jul 11, 2021 140 views Posted By : YarlSri TV
தோப்பு வெங்கடாசலம் வாகனத்தில் ஸ்டாலின் – உதயநிதி
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணையவிருக்கிறார். இதையடுத்து, யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கு ஏற்ப அவரது பிரச்சார வாகனத்தில் கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி படங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தேர்தல் நேரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தோப்பு வெங்கடாசலம் இன்று திமுகவில் இணையவிருப்பதாக தகவல்
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருந்த தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்த தேர்தலில் சீட் கொடுக்காததால், அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார்.
தோல்விக்கு பின்னர், அவர் செந்தில்பாலாஜி மூலமாக திமுகவில் சேர முயன்று வருவதாகவும், அதுவும் இன்றைக்கு அவர் திமுகவில் இணைய அதிகம் வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கு ஏற்ப, அவர் திமுகவில் இணைவதற்கு முன்பே, அவரது பிரச்சார வாகனத்தில் கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பிரச்சார வாகன படம் இணையங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, ’திமுக புகழ் பாட புறப்பட்டுவிட்டார் மாஜி அதிமுக அமைச்சர்’ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago