ஸ்டேன் சுவாமி மரணம் – ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
Jul 11, 2021 162 views Posted By : YarlSri TV
ஸ்டேன் சுவாமி மரணம் – ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரணத்தை கண்டித்து, ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக, தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஆவார். தீவிரவாதிகளுடன் தொடர்பு என குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட அவர், உடல்நல குறைவால் சிறைச் சாலையில் மரணமடைந்தார்.
ஸ்டேன் சுவாமிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி, ஈரோடு கருங்கள்பாளையம் காந்தி சிலை அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில், பொருளாளர் முகமது யூனுஸ், மாவட்ட துணைத் தலைவர் குறிஞ்சி பாஷா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யாஹ்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மீது போலியான வழக்கு புனையப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காத ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago