Skip to main content

விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடி பேச்சு!

Jun 24, 2021 143 views Posted By : YarlSri TV
Image

விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடி பேச்சு! 

விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்போது விண்வெளியில் விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலையத்துக்கு நீ ஹைசெங், லியு போமிங், டாங் ஹோங்போ என்னும் 3 வீரர்களையும் கடந்த 17-ந் தேதி அனுப்பி வைத்துள்ளது. இது ஒரு சாதனையாக சீனாவால் பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில் சீன விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்த 3 வீரர்களுடனும் அதிபர் ஜின் பிங் நேற்று பீஜிங்கில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடியே முதல் முறையாக நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். அவர்களது விண்வெளி ஆய்வுப்பணிக்காக ஜின்பிங் நன்றி தெரிவித்தார்.



அப்போது அவர், “நீங்கள் 3 மாதங்கள் விண்வெளியில் செலவிடுவீர்கள். விண்வெளியில் இருக்கும்போது நீங்கள் செய்யும் வேலையும், உங்கள் வாழ்க்கையும் சீன மக்களின் இதயங்களில் இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.



தொடர்ந்து அவர் விண்வெளி வீரர்களுடன் பேசும்போது, “நமது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். இது விண்வெளியை மனித குலத்தின் அமைதியான பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும்” எனவும் குறிப்பிட்டார்.



3 வீரர்களும் தங்களுக்கு அளித்து வருகிற ஆதரவுக்காக ஜின் பிங்குக்கு மனமார நன்றி தெரிவித்தனர். 5 நிமிடம் நடந்த இந்த உரையாடல் சீன அரசு டெலிவிஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த 3 விண்வெளி வீரர்களும் அடுத்த 3 மாதங்களில் ‘தியாங்காங் ஹெவன்லி பேலஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த விண்வெளி நிலையத்தை கட்டி முடிப்பார்கள். இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

10 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

10 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

10 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

10 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

10 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

10 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை