கேரளாவில் நாளை முதல் மதுக்கடை திறக்க அனுமதி!
Jun 16, 2021 142 views Posted By : YarlSri TV
கேரளாவில் நாளை முதல் மதுக்கடை திறக்க அனுமதி!
கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஊரடங்கில் தளர்வு செய்வது குறித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் ஏப்ரல் மாதம் இறுதியில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளை (வியாழக்கிழமை) முதல் கூடுதல் தளர்வுகளுடன் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் மீண்டும் அறிவிக்கப்படும் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
மற்ற நாட்களில் மதுக்கடைகள், பார்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, அவரவருக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்கி கொள்ளலாம்.
கொரோனா பரிசோதனை பாதிப்பு விகிதத்தின் அடிப்படையில் தளர்வுகள் நடைமுறை படுத்தப்படும்.
நீண்ட தூர பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் இயக்கப்படும். மற்ற மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து குறித்து முடிவு செய்யப்பட வில்லை. குமரி-கேரள எல்லையான களியக்காவிளை, இஞ்சிவிளை வரை கேரள அரசு பஸ்கள் இயக்கப்படும்.
அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து பொது தேர்வுகளும் நடத்தப்படும். திருமணம், மரண நிகழ்ச்சிகளில் பங்கேற்க 20 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. நாளை முதல் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் அனைத்து நாட்களிலும் இயங்கலாம். தலைமை செயலகத்தில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம். வங்கிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் செயல்படலாம்.
ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் அனுமதிக்கப்படுகிறது. வணிக மால்கள் திறக்க அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago