மட்டக்களப்பு மரப்பால ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது!
Jun 15, 2021 168 views Posted By : YarlSri TV
மட்டக்களப்பு மரப்பால ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது!
மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பாலம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த 4 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (15) காலையில் கைது செய்ததுடன் 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தெரிவித்தார்.
சிரேஷ்டகாவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்கா வின் ஆலோசனைக்கமைய சட்டவிரோத மணல் அகழ்வினை தடுப்பதற்காக அதில் ஈடுபடுவேரை கைது செய்யும் விசேட நடவடிக்கையை ஒன்று மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தலைமையிலான காவற்துறை குழுவினர் இன்று அதிகாலை மரப்பாலம் ஆற்று பகுதியினை சுற்றிவளைத்தனர்.
இதன்போது சட்டவிரோதமாக ஆற்றில் இருந்து உழவு இயந்திரத்தில் மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்ததுடன் 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கரடியனாறு காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago