Skip to main content

கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்பத்தி செய்து விநியோகித்து வந்த இருவர் கைது!

Jun 07, 2021 168 views Posted By : YarlSri TV
Image

கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்பத்தி செய்து விநியோகித்து வந்த இருவர் கைது! 

கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்பத்தி செய்து விநியோகித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.



சீனிப் பாணி, எதனோல், எசன்ஸ் உள்ளிட்டவை உள்ளீடுகளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலப்பட மதுபானம் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.



கோப்பாய் ஜிபிஎஸ் வீதியில் வீடு ஒன்றிலேயே இந்த கலப்பட மதுபான உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் அங்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சந்தேக நபர்களிடமிருந்து 14 போத்தல்கள் கலப்பட்ட மதுபானம், கான் இன்றில் கலப்படம் செய்யப்பட்ட மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் ஒருவரிடம் 90 ஆயிரத்து 900 ரூபாய் பணமும் மற்றைய சந்தேக நபரிடமிருந்து 49 ஆயிரத்து 550 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டன.



சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை