Skip to main content

தென்மராட்சியில் பயணத்தடையினால் சீவல் தொழிலாளர்கள் பாதிப்பு!

May 29, 2021 168 views Posted By : YarlSri TV
Image

தென்மராட்சியில் பயணத்தடையினால் சீவல் தொழிலாளர்கள் பாதிப்பு! 

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா  தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவியதாக நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் சமூக முடக்கல் கட்டுப்பாட்டினால் ஏற்பட்ட வருமான இழப்பையடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சீவல் தொழிலாளர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.



யாழ் மாவட்டத்தில்  தென்மராட்சி பிரதேசத்தில் சீவல் தொழிலை நம்பி வாழ்ந்து வருவோர் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.



தற்போதைய பயணக் கட்டுப்பாட்டின் மூலம் சீவல் தொழில் மூலம் தினமும் பெற்றுக் கொள்ளும் கள்ளினை விற்பனை செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் நாளாந்தம் காலையிலும் மாலையிலும் மரத்தில் ஏறி பெறப்படுகின்ற கள்ளை வீணாக நிலத்தில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,



அதை வேறு மாற்று உற்பத்தியும் எம்மால் மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது. நாளாந்தம் காலையும் மாலையும் சீவப்படும் கள்ளினை என்ன செய்வது என்றறியாதுள்ளது.



மீண்டும் மீண்டும் தொடர்ந்து அத் தொழிலை செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. அப்படி தொடர்ச்சியாக செய்யாவிடில் மீண்டும் அத்தொழிலை செய்யமுடியாத நிலை ஏற்படும். அத்தொடு தொடர்ந்து சீவல் செய்யாவிடில் அந்தமரம் முற்றாக அழிவடையும் நிலையும் வரும். அதன் காரணமாக காலையும் மாலையும் அதனுாடாகப் பெறப்படுகின்ற கள்ளினை கீழே ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.



இவ்வாறு நாளாந்தம் பெறப்படுகின்ற கள்ளினை எமது சங்கத்தின் உடாக விற்பனை செய்து கிடைக்கின்ற பணத்தின் மூலம் பெறுகின்ற வருமானத்தைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்ததாகவும் தற்போது அதற்கு ஒரு வழியும் இல்லாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது குடும்பத்தின் நிலையை கருதி நமக்கு ஏதேனும் ஒரு நிவாரணத்தை பெற்று தரவேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை