வீட்டு தனிமையில் இருக்கும் 2500 பேருக்கு 3 வேளை உணவு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
May 28, 2021 161 views Posted By : YarlSri TV
வீட்டு தனிமையில் இருக்கும் 2500 பேருக்கு 3 வேளை உணவு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்த மாதிரி வீடுகளில் முடங்கி கிடப்பவர்கள் வெளியே சென்று பொருட்கள் எதுவும் வாங்க முடியாது.
மேலும் உடல் சோர்வு போன்ற காரணங்களால் வீடுகளில் சமையல் செய்து சாப்பிடவும் சிரமப்படுகிறார்கள்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் இந்த மாதிரி தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் 2480 பேர் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் பெயர் விபரம், முகவரி ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு வழங்க உணவு தயாரிப்பதற்காக தனியாக சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு தயாரிக்கப்படும் உணவை இந்த பணியில் ஈடுபடும் 100 களப்பணியாளர்கள் வீடு தேடி சென்று விநியோகிப்பார்கள்.
காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி, போன்றவை வழங்கப்படும். மதியம் சாப்பாடு, இரவு டிபன் என்று 3 வேளையும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த மனிதநேய உதவி கொரோனா கட்டுப்படும் வரை தொடர்ந்து நடைபெறும் தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீட்டுத்தனிமைக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் பட்டியலை பெற்று உணவு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
முதல் நாளான இன்று காலை சிற்றுண்டியாக இட்லி, பொங்கல், வடை, கேசரி வழங்கப்பட்டது. மதியம் சாப்பாடு வழங்கப்படுகிறது. 3 வேளையும் சைவ உணவே வழங்கப்படும்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago