மட்டக்களப்பில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை!!!
May 21, 2021 167 views Posted By : YarlSri TV
மட்டக்களப்பில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை!!!
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் வினைத்திறன் மிக்க வேலைத்திட்டங்களும் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருத்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலும் இவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் தலைமையில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஓட்டமாவடி மூன்றாம் வட்டார பிரதேசத்தின் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் பொது இடங்கள் மற்றும் கடை தெருக்கள் உள்ளிட்ட பொது மக்களின் வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.ஜெளபர் ஆகியோர் கலந்து கொண்டனர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago