தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
May 21, 2021 180 views Posted By : YarlSri TV
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்
யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணி தொற்றாளர்களுடன் நடமாடியதன் அடிப்படையில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீடுகளில் சுயதனிமைப் படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இடைக்கால நிவாரண உதவியாக அந்த 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதியை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றோம்
அதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இன்று வரை சுமார் 7251 குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதி கொண்ட உணவு பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகின்றது
இந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காலத்தில் எமக்கு உரிய விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களுக்கு அதுகிடைக்கும் அதாவது விபரங்கள் கிடைக்கப்பெறுவதன் அடிப்படையிலேயே உதவிப் பொருட்களை வழங்க முடியும்
இந்த விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலர் களுக்கும் உரியவரான அறிவுறுத்தல்கள் எம்மால் வழங்கப்பட்டுள்ளன எனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago