ஆந்திராவில் சோகம் - சுரங்க வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 10 பேர் பலி
May 09, 2021 138 views Posted By : YarlSri TV
ஆந்திராவில் சோகம் - சுரங்க வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 10 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள்ளி கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு ஜெலாட்டின் குச்சிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று வந்தது. சுரங்க தொழிலாளர்கள் சிலர் அதில் இருந்த ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைத்துள்ளனர்.
இதில், திடீரென அவை வெடித்து, அடுத்தடுத்து பரவி பாதிப்பு ஏற்படுத்தின. இந்த வெடிவிபத்தினால் அருகிலுள்ள கிராமங்களும் அதிர்ந்துள்ளன.
இதுதொடர்பாக, கடப்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் கூறுகையில், ஜெலாட்டின் குச்சிகள் அனைத்தும் புத்வெல் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டன. இந்த சுண்ணாம்பு சுரங்கம் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைக்கும்பொழுது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களில் பலர் புலிவேந்துலா என்ற முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராம மக்கள் என கூறப்படுகிறது.
வெடிவிபத்து நடந்தபொழுது 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடி விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago