ஒரே நாளில் 31 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!
May 15, 2021 187 views Posted By : YarlSri TV
ஒரே நாளில் 31 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய கோவிட் மரணங்கள் இதுவாகும்.
இதன்படி, இலங்கையில் 923 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, நேற்றைய தினம் 2263 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 138,065 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, 110108 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 27054 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.
மேலும், தற்போது வரையில் 1154795 பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், 243957 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago