கிளிநொச்சி ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ள காசோலைகள்!
May 14, 2021 188 views Posted By : YarlSri TV
கிளிநொச்சி ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ள காசோலைகள்!
கிளிநொச்சி ஏ9 வீதியில் பயன்படுத்தப்பட்ட காசோலைகள் வீசப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த காசோலைகள் இரு வேறு பகுதிகளில் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. கிளிநொச்சி பளை காவற்துறை பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு சந்தி மற்றும், கிளிநொச்சி காவற்துறை பிரிவிற்குட்பட்ட மதுவரித்திணைக்கள அலுவலகத்தை அண்மித்த பகுதியிலும் இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளன.
வீசப்பட்டுள்ள காசோலைகள் அரச மற்றம் தனியார் வங்கிகளினுடையது என்பதுடன், அவை பயன்படுத்தப்பட்டும் உள்ளன. ஏ9 வீதியில் இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளமையானது கேள்விகளை எழுப்பியுள்ளது. பயன்படுத்தப்பட்ட காசோலைகள் எனினும் அது என்ன நோக்கத்திற்காக வீசப்பட்டுள்ளன என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட காசோலைகள் இவ்வாறு வீதியில் வீசப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காவற்துறையினரும், காவற்துறை புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago