Skip to main content

பல மாவட்டங்களில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!

Apr 30, 2021 147 views Posted By : YarlSri TV
Image

பல மாவட்டங்களில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்! 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.



மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்,  சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.



குறித்த பகுதிகளிலேயே 75 மி.மீ.க்கு மேலான மழையை எதிர்பார்க்கலாமெனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.



நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை