இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் நியமனம் : அமெரிக்காவில் சரித்திரம் படைத்தார், இந்திய பெண்!
Apr 23, 2021 204 views Posted By : YarlSri TV
இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் நியமனம் : அமெரிக்காவில் சரித்திரம் படைத்தார், இந்திய பெண்!
அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் அமர்த்தப்பட்டு இந்திய வம்சாவளிப்பெண் வனிதா குப்தா சரித்திரம் படைத்தார்.
அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில், இணை அட்டார்னி ஜெனரல் பதவிக்கு இந்திய வம்சாவளிப்பெண்ணான வனிதா குப்தா (வயது 46) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நீதித்துறையில் இது மூன்றாவது பெரிய பதவி ஆகும்.
இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளிப்பெண் இவர்தான். அந்த வகையில் அவர் புதிய சரித்திரம் படைத்து இருக்கிறார்.
இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்கியது. இவருக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிராக 49 ஓட்டுகளும் விழுந்தன.
செனட் சபையில் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தலா 50 இடங்களை கொண்டுள்ளன. ஓட்டெடுப்பில் தலா 50 ஓட்டு விழுந்து விட்டால், துணை ஜனாதிபதி தனது ஓட்டை பதிவு செய்து முடிவுக்கு உதவுவார். அந்த வகையில் வனிதா குப்தா நியமன ஒப்புதலுக்கு 50, எதிராக 50 ஓட்டுகள் விழுந்து விட்டால், முடிவு காண்பதற்காக தனது ஓட்டை போடுவதற்காக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சபையில் இருந்தார். ஆனால் குடியரசு கட்சி எம்.பி. லிசா முர்கோவ்ஸ்கி தனது ஓட்டை வனிதா குப்தாவுக்கு ஆதரவாக போட்டார். இதனால் அவர் 51 ஓட்டுகளை பெற்று விட்டதால், கமலா ஹாரிஸ் ஓட்டு போடும் அவசியம் எழவில்லை.
வனிதா குப்தாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர் ராஜீவ் குப்தா, கமலா வர்ஷினி தம்பதியின் மகளாக பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியாவில் பிறந்து வளர்ந்து, யேல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டமும் பெற்றவர் இவர். அங்கு கொலம்பியா மாவட்டத்தின் சட்ட உதவி சங்கத்தின் சட்ட இயக்குனரான சின் கே. லேயை மணந்துள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மனித உரிமைகளுக்காக போராடி பிரபலமான வக்கீல் வனிதா குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago