Skip to main content

களவாடப்பட்ட 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் மீட்பு

Apr 06, 2021 207 views Posted By : YarlSri TV
Image

களவாடப்பட்ட 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் மீட்பு 

கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



குறித்த களவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் களவாடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோவின் வழிகாட்டலில், யாழ்ப்பாண பாலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ. நெவில்பியந்த தலைமையிலான குழுவினரே களவாடப்பட்ட உபகரணங்களை மீட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை