விமானப்படையின் 3 நாள் மாநாடு தொடங்கியது - பாதுகாப்பு சவால்கள் பற்றி ஆலோசனை!
Apr 16, 2021 180 views Posted By : YarlSri TV
விமானப்படையின் 3 நாள் மாநாடு தொடங்கியது - பாதுகாப்பு சவால்கள் பற்றி ஆலோசனை!
டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு தொடங்கியது. நாடு சந்திக்கும் பாதுகாப்பு சவால்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் மாநாடு ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு, நேற்று டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் தொடங்கியது. இது, 3 நாள் மாநாடு ஆகும்.
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மாநாட்டை தொடங்கி வைத்தார். போருக்கு எப்போதும் தயாராக இருப்பதற்காக விமானப்படைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
முதல் நாள் மாநாட்டில், கிழக்கு லடாக்கில் உள்ள சூழ்நிலை உள்பட நாடு சந்தித்து வரும் ஒட்டுமொத்த பாதுகாப்பு சவால்கள் குறித்து விமானப்படை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாடு சந்திக்கும் எதிர்கால சவால்களை கருத்திற்கொண்டு, விமானப்படையின் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் வியூகங்கள் குறித்தும் அதிகாரிகள் இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்துகிறார்கள். விமானப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்வாழ்வு நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கிறார்கள்.
மாநாட்டில், விமானப்படையின் அனைத்து பிராந்திய தலைமை அதிகாரிகள், அனைத்து முதன்மை அதிகாரிகள், தலைமை இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago