வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சவம்!
Apr 12, 2021 191 views Posted By : YarlSri TV
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சவம்!
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இறுதி பங்குனி திங்கள் உற்சவம் இன்று (திங்கட்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்றது.
பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர்.
குறிப்பாக கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இலங்கையின் அருள்மிகுந்த கண்ணகை அம்மன் ஆலயமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் பங்குனி திங்கள் உற்சவம் மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்படுகிறது.
இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகைதந்து பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தனர்.
அத்தோடு, தமது நேர்த்திக்கடன்களையும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் நிறைவேற்றி வருகின்றனர்.
இன்று மாலை திருமஞ்சம் இழுக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago