Skip to main content

மோட்டார் சைக்கிளுடன் மோதிய கார் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப.லி!

Mar 31, 2021 203 views Posted By : YarlSri TV
Image

மோட்டார் சைக்கிளுடன் மோதிய கார் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப.லி! 

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் காரொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்துள்ளார்.



குறித்த சம்பவம் இன்று (30.03.2021) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஐந்தாம் கட்டை பகுதியில் வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.



இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை கப்பல்துறை பகுதியை சேர்ந்த கே.அந்தோணிசாமி (48 வயது) என்பவரே உ.யிரிழந்துள்ளார்.



உ.யிரிழந்தவரின் ச.டலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பி.ரேத அ.றையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை