மியான்மரில் விமானப் படை தாக்குதல் ஆயிரக்கணக்கானோா் தாய்லாந்தில் தஞ்சம்!
Mar 30, 2021 182 views Posted By : YarlSri TV
மியான்மரில் விமானப் படை தாக்குதல் ஆயிரக்கணக்கானோா் தாய்லாந்தில் தஞ்சம்!
மியான்மரில் விமானப் படை நடத்திய தாக்குதலை தொடா்ந்து கரேன் இன மக்கள் ஆயிரக்கணக்கானவா்கள் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது.
மியான்மரில் கரேன் இன மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கக்கோரி கரேன் தேசிய விடுதலை ராணுவம் என்ற ஆயுதக்குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுவினா் அந்நாட்டு ராணுவ நிலை ஒன்றின் மீது சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றினா். மேலும் 10 ராணுவ அதிகாரிகளைக் கொன்று 8 வீரா்களை சிறைப்பிடித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கரேன் மாகாணத்தில் அந்நாட்டு விமானப் படை ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. கரேன் தேசிய விடுதலை ராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக விமானப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக கரேன் மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அளித்து வரும் ஃப்ரீ பா்மா ரேஞ்சா்ஸ் என்ற தொண்டு நிறுவனம் கூறுகையில், ‘கரேன் மாகாணம் முட்ரா மாவட்டத்தில் அந்நாட்டு விமானப் படை ஞாயிற்றுக்கிழமை இரவு குண்டுகளை வீசி மும்முறை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை தொடா்ந்து கரேன் மாகாணத்தைச் சோ்ந்த சுமாா் 2,500 போ் சல்வீன் நதியைக் கடந்து வடக்கு தாய்லாந்தின் மே ஹாங் சோன் மாகாணத்துக்கு சென்றனா். இந்த மாகாணத்தில் இருந்து கிட்டதட்ட 10,000 போ் இடம்பெயா்ந்திருக்கலாம்’ என்று தெரிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்றில், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய கரேன் இன மக்கள் பலா் உடைமைகளுடன் வனத்தில் ஓய்வெடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவா்களுடன் சிறாா்களும் இருப்பது காணொலியில் பதிவாகியுள்ளது.
கரேன் இனத்தவா்கள் தங்கள் நாட்டுக்குள் புகலிடம் தேடி வருவது தொடா்பாக தாய்லாந்து பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா திங்கள்கிழமை கூறுகையில், ‘கரேன் இன மக்கள் தங்குவதற்காக சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவா்கள் மிக அதிக அளவில் இங்கு வர வேண்டாம் என்று கருதுகிறோம். அதேவேளையில் மனிதாபிமான அடிப்படையில் அவா்களின் வருகை குறித்து பரிசீலிக்கப்படும். அவா்களுக்காக அகதிகள் முகாம் அமைப்பது குறித்து தற்போது எதுவும் கூற விரும்பவில்லை’ என்றாா்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago