Skip to main content

நொளம்பூரில் ராஜஸ்தான் காவல் குழுவினர் கொடி அணிவகுப்பு!

Mar 30, 2021 191 views Posted By : YarlSri TV
Image

நொளம்பூரில் ராஜஸ்தான் காவல் குழுவினர் கொடி அணிவகுப்பு! 

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியில் இன்று ராஜஸ்தான் மாநில காவல் குழுவினர் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.



சட்டமன்ற தேர்தலையொட்டி, மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது.



இதன் ஒரு பகுதியாக சென்னை நொளம்பூர் பகுதியில் ராஜஸ்தானில் இருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள காவல் குழுவினர் மற்றும் சட்டம் – ஒழுங்கு காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்திய ராஜஸ்தான் மாநில காவல்குழுவினர், தெருக்களில் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர்.



சின்ன நொளம்பூர் சாலையில் தொடங்கிய இந்த அணிவகுப்பானது, பாட சாலை தெரு, கஜலட்சுமி நகர் முதல் மற்றும் 2-வது தெருக்கள், பெருமாள் கோயில் தெரு, மாதா கோயில் தெரு மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்திப்புகள் வழியாக சென்று, நொளம்பூர் யூனியன் ரோடு பகுதியில் முடிவடைந்தது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

16 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

16 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை