பலாத்காரம் செய்ய முயற்சித்த அதிபர் பிணையில் விடுதலை!
Apr 02, 2021 197 views Posted By : YarlSri TV
பலாத்காரம் செய்ய முயற்சித்த அதிபர் பிணையில் விடுதலை!
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது.
வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கஸ்பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த காரணத்தால் குறித்த ஆசிரியை பனடோல் குளிசைகளை அதிகளவு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த அதிபரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்து விடுவித்துள்ளது.
இதேவேளை குறித்த ஆசிரியை குணமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago