கோவையில் பிரதமர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்!
Mar 30, 2021 195 views Posted By : YarlSri TV
கோவையில் பிரதமர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்!
கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி காட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைதுசெய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி, கோவை மாவட்ட விமான நிலையம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் தாராபுரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை பீளமேடு பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, அவர்கள் அவினாசி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அடுத்து, போராட்டக்காரர்களை கைதுசெய்த போலீசார், அவர்களை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் பீளமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago