அடிதான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு!
Mar 19, 2021 200 views Posted By : YarlSri TV
அடிதான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
அதிமுக அமைச்சர்களில் சர்ச்சைக்கு பெயர்போனவர் ராஜேந்திர பாலாஜி. பொதுவெளியில் மற்றவர்களை மிரட்டுவது, அவதூறாக பேசுவது, அதிமுகவை தொட்டு பார்க்க நினைத்தால் கையை வெட்டுவேன் என்று கூறுவது என அவரின் அலப்பறைகளுக்கு எல்லையே இல்லை. தற்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் சர்ச்சை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தலைமை வாய்ப்பு கொடுத்துள்ளது. இவர் இதனையடுத்து ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் தளவாய்புரம், செட்டியார் பட்டி, முகவூர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டும் வருகிறார்.
கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற .ராஜேந்திரபாலாஜியின் செல்வாக்கு அங்கு சரியத் தொடங்கிய நிலையில் தற்போது ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தபோது செய்தியாளர்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்தார். அப்போது அவரிடம் அமமுக குறித்து கேள்வி எழுப்பிய போது, அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை அளிக்கும் வகையில் கூறியுள்ளார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சமீபத்தில் அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ராஜேந்திர பாலாஜி முதல்வர், துணை முதல்வரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago