கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய விளையாட்டு திடல்!
Mar 24, 2021 183 views Posted By : YarlSri TV
கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய விளையாட்டு திடல்!
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சமூகத்தின் மற்றொரு அங்கமாக இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனிலும் அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் மிகப்பெரிய சுற்றுலா பகுதியாக திகழும், அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் விளையாடும் வகையில் புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 1,648 சதுர மீட்டர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் விளையாடும் வகையில் உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ற வகையில் விளையாட முடியும். மேலும் அவர்கள் தங்களது உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள உதவுவதுடன், சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இருக்கும்.
இங்கு கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்டவற்றை விளையாடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடும் வகையில் மைதானமும் உள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் சர்வதேச தரத்துக்கு இணையாக இங்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள விளையாட்டு மைதானங்களில் மாற்றுத்திறனாளிகள் கீழே விழுந்தாலும் அடிபடாத, காயங்கள் ஏற்படாத வகையில் ரப்பர் தரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விளையாடும் இடங்களில் வெயில் உள்ளிட்டவற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகளுக்காக 22 லட்சம் திர்ஹாம் நிதி செலவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் எளிதில் இந்த இடத்துக்கு வந்து செல்லும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்கள் தங்களது கார்களை நிறுத்திக் கொள்ளவும் வசதியுள்ளது.
பல்வேறு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழும் அபுதாபி கடற்கரை பகுதி இனி மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறந்த சுற்றுலா தலமாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago