Skip to main content

ஓமன் மன்னருக்கு காந்தி அமைதி விருது - இந்திய அரசு அறிவிப்பு

Mar 23, 2021 186 views Posted By : YarlSri TV
Image

ஓமன் மன்னருக்கு காந்தி அமைதி விருது - இந்திய அரசு அறிவிப்பு 

மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு, காந்தி அமைதி விருது வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

 



இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-



இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளின் 125-வது பிறந்த நாளான 1995-ம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்தி அமைதி விருது வழங்குவது என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கி வருகிறது.



இந்த விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தேர்வு செய்யப்படுகிறது. இந்த குழுவானது கடந்த 19-ந் தேதி கூடியது.



அப்போது மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு 2019-ம் ஆண்டுகான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவது என ஒருமனதாக தேர்வு செய்தது. இந்த விருதானது ஓமன் மன்னர் காந்திய வழியில் ஓமன் நாட்டை சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்டவற்றை மேம்படுத்திக் காட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த விருதுக்கு அவர் பொருத்தமானவர் என முடிவு செய்யப்பட்டது.



ஓமன் நாட்டை தனது திட்டங்கள் மூலம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். மேலும் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது அமைதி முயற்சிகள் மேற்கொள்ள பெரும் ஒத்துழைப்பு வழங்கியவர்.



இந்தியாவில் கல்வி பயின்றவர். இந்திய முன்னாள் ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் மாணவர் ஆவார். இதன் காரணமாக ஓமன் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு சிறப்புடன் இருக்க ஒரு சிற்பியாக திகழ்ந்தார். இதனால் இரு நாடுகளின் உறவு புதிய உச்சத்தை அடைந்தது.



அத்தகைய சிறப்பு மிக்க மனிதருக்கு இந்த விருது வழங்குவது மிகவும் பொருத்தமாகும். இந்த விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களை கொண்டது ஆகும். இந்த தகவலை இந்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ளது.



இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை