Skip to main content

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்!

Mar 13, 2021 189 views Posted By : YarlSri TV
Image

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்! 

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சவாடி அலுவலர்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா தொங்கி கிவைத்து, ஒதுக்கீடு பணியை பார்வையிட்டார.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச் சாவடிகளுக்கும் 3 ஆயிரத்து 472 அலுவலர்களும், கூடுதலாக 696 அலுவலர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 168 பேர் பணியில் ஈடுபட உள்ளதாக கூறினார். இதற்காக அலுவலர்களை சுழற்சி முறையில், மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று முடிந்ததாகவும் அவர் கூறினார்.



தொடர்ந்து, நாளை 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு, 3 மையங்களில் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், தனி வட்டாட்சியர் புஷ்பா தேவி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை