Skip to main content

இந்திய-வங்காளதேச எல்லை வழியாக வங்காளதேசத்துக்கு கால்நடைகளை கடத்தும் முயற்சி நடந்து வருகிறது!

Mar 11, 2021 182 views Posted By : YarlSri TV
Image

இந்திய-வங்காளதேச எல்லை வழியாக வங்காளதேசத்துக்கு கால்நடைகளை கடத்தும் முயற்சி நடந்து வருகிறது! 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் கூறியதாவது



இந்திய-வங்காளதேச எல்லை வழியாக வங்காளதேசத்துக்கு கால்நடைகளை கடத்தும் முயற்சி நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இப்படி கடத்த முயன்ற 4 லட்சத்து 76 ஆயிரம் கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன.



கால்நடைகள் கடத்தலை தடுக்க எல்லையில் 24 மணி நேரமும் ரோந்துப்பணி நடந்து வருகிறது. சர்வதேச எல்லையில் கண்காணிப்பு நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள புறக்காவல் நிலையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



கால்நடை கடத்தலில் தொடர்புடைய எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை