தடுப்பூசி விவகாரம் - உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு நாளை ஆலோசனை!
Mar 16, 2021 162 views Posted By : YarlSri TV
தடுப்பூசி விவகாரம் - உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு நாளை ஆலோசனை!
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.
இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகக் கூறி இந்த தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன. இதனால் பிற நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தங்களது தடுப்பூசி பாதுகாப்பு மிகுந்தது என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை கூட உள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து கிடைக்கப் பெற்றுள்ள தரவுகள் மூலம் ஆய்வு செய்யப்படும் எனவும், ஐரோப்பிய மருத்துவ அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தற்போதைக்கு தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டியது இல்லை என தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago