கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையைகாப்பாற்ற கடலில் குதித்த இளைஞன் பலி!
Mar 14, 2021 161 views Posted By : YarlSri TV
கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையைகாப்பாற்ற கடலில் குதித்த இளைஞன் பலி!
தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த சிவில் பொறியியலாளர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மத்துகம, கழுபஹன பிரதேசத்தை சேர்ந்த உதய குமார என்ற 31 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் கெலிமோ கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, சிறு பிள்ளைகள் சிலர் நீரில் அடித்து செல்வதனை அவதானித்துள்ளார்.
சிறுவர்களை காப்பாற்றுவதற்காக பெண்கள் சிலர் கடலில் இறங்கியுள்ளனர். இதன்போது குறித்த இளைஞனும் நீரில் இறங்கி பெண்கள் மற்றும் சிறுவர்களை காப்பாற்ற உதவியுள்ளார்.
இதன் போது திடீரென எழுந்த கடல் அலையில் சிக்கிய அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1440 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1440 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago