பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை!
Mar 11, 2021 165 views Posted By : YarlSri TV
பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை!
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2004-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2007-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலேயே இதுவரை பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்தநிலையில், முதல்முறையாக தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘குவாட்’ கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது.
இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொள்கிறார்கள்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலாளர் ஜென் பிசாகி கூறியதாவது:-
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை அமெரிக்காவின் முக்கியமான கூட்டாளிகள் ஆகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் கூட்டாளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புக்கு ஜோ பைடன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை இது காட்டுகிறது.
இந்த கூட்டத்தில், பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உலக சமுதாயம் சந்திக்கும் கொரோனா அச்சுறுத்தல், பொருளாதார பிரச்சினை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதுபோல், டெல்லியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனியாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘‘4 தலைவர்களும் பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, உலக பிரச்சினைகள் குறித்து விவாதித்து கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடுவார்கள்.
கொரோனாவை ஒடுக்குவதற்கான முயற்சிகள், பாதுகாப்பான, மலிவான கொரோனா தடுப்பூசிகளை கிடைக்கச் செய்வது, பருவநிலை மாற்றம், கடல்சார் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ வலிமையை அதிகரித்து வருகிறது. தெற்கு சீன கடல் முழுவதையும் சொந்தம் கொண்டாடுகிறது. இந்த பின்னணியில், இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளும் நாளை ஆலோசனை நடத்துகின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago