Skip to main content

மன்னாரில் புகையிரத்துடன் மோதுண்டு உயிரிழந்த 58 வயதுடைய ஒருவருக்கும் கொரோனா!

Mar 07, 2021 215 views Posted By : YarlSri TV
Image

மன்னாரில் புகையிரத்துடன் மோதுண்டு உயிரிழந்த 58 வயதுடைய ஒருவருக்கும் கொரோனா! 

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னாரில் நேற்று காலை ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்த 58 வயதுடைய ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



கிளிநொச்சி,கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளத்தில் இருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை