கொரோனா மரண அடக்கம் குறித்த புதிய ஒழுங்கு விதிகள் அடுத்த வாரம் வெளியீடு!
Feb 27, 2021 195 views Posted By : YarlSri TV
கொரோனா மரண அடக்கம் குறித்த புதிய ஒழுங்கு விதிகள் அடுத்த வாரம் வெளியீடு!
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு அடுத்தவார முற்பகுதியில் வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாமை நீண்டகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் அதற்கான அனுமதி நேற்றுமுன்தினம் விசேட வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.
இந்த வர்த்தமானியில் கொரோனாவால் மரணிப்பவரின் உடலைத் தகனம் அல்லது புதைக்க முடியும் என்பதுடன், மேலும் பல துணை உத்தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய துணை உத்தரவுகளின்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய, அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.
இதற்கமைய நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் வழங்கக்கூடிய உத்தரவுகளுக்கு ஏற்ப சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, அடுத்தவார முற்பகுதியில் புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1440 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago