அமெரிக்கா கடும் நடவடிக்கை? நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜோ பைடன் தகவல்
Feb 28, 2021 152 views Posted By : YarlSri TV
அமெரிக்கா கடும் நடவடிக்கை? நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜோ பைடன் தகவல்
சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதினார்.
அவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். ஜமால் கசோகி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு சென்றபோது அவர் கொடூரமாக உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இக்கொலைக்கு சவுதி அரேபியா இளவரசர் முக மதுபின் சல்மான் உத்தரவிட்டார் என்று துருக்கி குற்றம் சாட்டியது. மேலும் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.
இந்த நிலையில் ஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வு துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி பட்டத்து இளவரசரின் ஒப்புதலோடுதான் இந்த கொலை நடந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நிலையில் ஜமால் சசோகி கொலையில் சவுதி இளவரசருக்கும் தொடர்பு இருப்பது பற்றி அமெரிக்க புலனாய்வுதுறை வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா, விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது சவுதி அரேபியா விவகாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்து உள்ளதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago