சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் ‘எம்.எல்.ஏ சீட்டுகளை விற்பதாக புகார்!
Feb 18, 2021 222 views Posted By : YarlSri TV
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் ‘எம்.எல்.ஏ சீட்டுகளை விற்பதாக புகார்!
கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை கோட்டைவிட்டது ஊரறிந்த உண்மை. அதனால், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய அவர், அவ்வளவு எளிதாக ஆளுங்கட்சியினர் நம்மை ஆட்சியைப் பிடிக்க விடமாட்டார்கள் என கூறியிருந்தார். இது சொந்த கட்சியினருக்கே பொருந்துவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
சேலம் மாவட்டத்தின் ஏற்காடு தொகுதியின் எம்.எல்.ஏவாக அதிமுகவை சேர்ந்த சித்ரா இருக்கிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவுகிறது. திமுகவின் மூத்த உறுப்பினர்கள் பலர் இந்த தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கும் நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் மாதேஸ்வரன் என்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு தான் அந்த எம்.எல்.ஏ சீட் என கூறியிருக்கிறார்.
திமுகவினர் அவர் மீது கடுப்பில் இருக்கிறார்களாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மாதேஸ்வரன் அண்மையில் தான் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியிருக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்க சிவலிங்கம் முனைப்பு காட்டுவது, திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பேசிய உறுப்பினர்கள் சிலர், சிவலிங்கம் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கட்சிப் பதவியை மற்ற கட்சியினரிடம் இருந்து காசு வாங்கிக் கொண்டு கூறு போட்டு விற்பதில் அவர் கில்லாடி. திமுக தலைமையே தனது கைக்குள் இருப்பதாக எல்லாரிடமும் திமிராக பேசுகிறார்.
அதிமுகவில் கட்சித் தாவிய மாதேஸ்வரன் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டால் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். எம்.எல்.ஏ சீட்டை கூறுபோட்டு விற்கும் சிவலிங்கம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பித் தள்ளியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago