இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!
Feb 17, 2021 224 views Posted By : YarlSri TV
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் திட்டமிட்டபடி நடைபெறும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்திற்கு அறிவித்ததாக நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமரால் நாடாளுமன்ற வளாகத்திற்கு உத்தேச விஜயம் நடைபெறாது என்று வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் உயர்ஸ்தாணிகராலயம் ஊடாக இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக கடந்த 8 ஆம் திகதி திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
நாடாமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்கு வாய்ப்பளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை
இவ்வாறானதொரு நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் நாடாளுமன்ற உரை இடம்பெறாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாட்கள் உத்தியோகபூர்வ அரசு பயணமாக எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த வருடத்தில் நாட்டிற்கு வருகை தரும் முதல் வெளிநாட்டுத் தலைவராக இருக்கும் இம்ரான் கான், இந்த பயணத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அளித்த உறுதிமொழியை வரவேற்பதாக இம்ரான் கான் தனது ருவிட்டரில் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
18 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
18 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
18 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
18 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
18 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
18 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago