Skip to main content

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்கு!

Feb 09, 2021 219 views Posted By : YarlSri TV
Image

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்கு! 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக "B" அறிக்கையூடாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன. ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ARஅறிக்கையூடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, பொலிஸ் நிலையங்கள் "B"  அறிக்கையூடாக பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலான குழுவிற்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளன.



இது தொடர்பிலே சிரேஸ்ட சட்டவாளர் ரி.பரன்சோதி மற்றும், சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் ஆகியோரிடம் தொடர்புகொண்டுகேட்டபோது, ஏற்கனவே குறித்த பேரணிக்கு தடைகோரி பொலிஸ் நிலையங்களிலிருந்து AR அறிக்கையூடாக முல்லைத்தீவு நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.



குற்றம் ஒன்று இடம்பெற்றதற்கான சந்தேகம் இருந்தால் AR அறிக்கையூடாக வழக்குத் தாக்கல் செய்யப்படும். அந்தவகையிலேயே குறித்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி நீதிமன்றால் உத்தரவொன்றும் வழங்கப்பட்டிருந்தது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை