சென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் 9-ந்தேதி டிக்கெட் விற்பனை
Feb 07, 2021 159 views Posted By : YarlSri TV
சென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் 9-ந்தேதி டிக்கெட் விற்பனை
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
அதன்படி முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு முன் எச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
இதற்கிடையே சென்னையில் வருகிற 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி 2-வது டெஸ்ட் போட்டிக்கான சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 15 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக டிக்கெட் விற்பனை வருகிற 9-ந்தேதி ஆன்லைனில் தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியதாவது:-
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வருகிற 9-ந்தேதி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2-வது டெஸ்டுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதால் ஐ.ஜே. மற்றும் கே ஆகிய 3 ஸ்டாண்டுகளின் இருக்கைகள் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
9 ஆண்டுக்கு பிறகு அந்த 3 ஸ்டாண்டுகளிலும் ரசிகர்கள் அமர வைக்கப்படுகிறார்கள். கடைசியாக 2012-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது அந்த 3 ஸ்டாண்டிலும் ரசிகர்கள் இருந்தனர். பின்னர் விதிமுறை மீறல் காரணமாக அந்த 3 ஸ்டாண்டுகள் ‘சீல்’ வைக்கப்பட்டது. தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் 3 கேலரிகளும் திறக்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1440 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1440 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago