Skip to main content

யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!

Feb 13, 2021 200 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று! 

யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!



 



யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



அவர் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்றுக் குறைவடைந்துள்ளது. எனினும், நேற்று முன்தினமும் நேற்றும் திடீரென தொற்றுறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அச்சுவேலி சந்தைப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் நால்வர் மற்றும் பேருந்து நடத்துனரின் மனைவி, பிள்ளை ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.



யாழ். மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. யாழில் இப்போது அனைத்துச் செயற்பாடுகளும் இயல்பு நிலையில் உள்ளது. எனினும் சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



 அச்சுவேலி சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே நேற்று நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.



அச்சுவேலிப் பகுதியில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்கள், வெளி மாவட்டங்களிலுள்ள சந்தையுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். இந்நிலையில், அச்சுவேலி சந்தைப் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்குச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.



புதிய கொத்தணி உருவாகும் சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்.



குறிப்பாக, பாடசாலைகள், மதத்தலங்கள் ஏனைய பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது க.பொ.த. பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அபாய நிலையை உணர்ந்து பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும்.



அத்தோடு, பேருந்துகளில் பயணிப்போர் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி இடங்களுக்கு செல்வோர் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். முச்சக்கர வண்டிச் சாரதிகளும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்., அச்சுவேலி சந்தையினை மூடுவதற்கு இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை