ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Feb 05, 2021 230 views Posted By : YarlSri TV
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதிய புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று காலை 7 மணிக்கு ஹோமாகம புகை யிரத நிலையத்தில் பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த புகையிரதம் காலை 8:10 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைய உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த புகையிரதம் மாலை 6:10க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஹோமாகம நோக்கி மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.
இதேவேளை, சீரமைப்பு பணிகள் காரணமாக, பிரதான மார்க்கம் நாளை முதல் 36 மணித்தியாலங்களுக்கு மூடப் பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – புத்தளம் ஏ3 பிரதான மார்க்கத்தில், நீர் கொழும்பு – கல்கந்த சந்தியில் உள்ள தொடர்ந்து குறுக்கு வீதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகள் காரண மாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை 6 மணி வரையில், 36 மணித்தியாலங் களுக்குக் குறித்த தொடர்ந்து மார்க்கம் மூடப்பட உள்ளது.
குறித்த மார்க்கத்தில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து புகையிரத சேவைகளும், கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலைய புகையிரத நிலையம்வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
24 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
24 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
24 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago